"சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் வேண்டும்" - பிரதமர் மோடி

சட்டமன்றங்களில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் - பிரதமர் மோடி
x
சட்டமன்றங்களில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 

சிம்லாவில் நடைபெறும் 82-வது அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய மோடி, ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு வெறும் அமைப்பல்ல, நாட்டின் இயற்கையான தன்மை என குறிப்பிட்டார்.

நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல, புதிய இலக்கை அடைய வேண்டும் என்றார். அது, அனைவரின் முயற்சியின் மூலமாகவே சாத்தியமாகும் எனக்கூறிய பிரதமர் மோடி,

சில ஆண்டுகளாக,  பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நிறைவேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதுவரை இந்தியா அடைந்த வளர்ச்சி அனைத்தும், மாநிலங்களின் துடிப்பான பங்களிப்பால் சாத்தியமானது என்றும் தெரிவித்தார். 

சட்ட மன்றங்களில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற, தனி நேரம் ஒதுக்க வேண்டும், கண்ணியமான, அவதூறு அற்ற விவாதம் நடத்த வேண்டும் என்ற மோடி, இளைய உறுப்பினர்கள், பெண் பிரதிநிதிகளுக்கு போதிய வாய்ப்புகள் வழங்குமாறும் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்