லக்கிம்பூர் வன்முறை சம்பவம் - நாளை காலை ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 2 வது சம்மன்

நாளை காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் 2வது சம்மன் ஒட்டப்பட்டது.
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் - நாளை காலை ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 2 வது சம்மன்
x
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உத்திரபிரதேச போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ரா இன்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி நேற்றைய தினம் உ.பி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் 2 வது முறையாக ஆஜராக கோரி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக கோரி இரண்டாவது சம்மன் ஒட்டியுள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளதாவும், அதனால் அவர் எங்கு உள்ளார் என்பதை எங்களால் கண்டு பிடிக்க இயலவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதியாக அவரது செல்போன் இந்திய-நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்துள்ளது என்பதை உத்தரபிரதேச காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்