லக்கிம்பூர் சம்பவம்- உச்சநீதிமன்றம் உத்தரவு

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பான நிலவர அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்கிம்பூர் சம்பவம்- உச்சநீதிமன்றம் உத்தரவு
x
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பான நிலவர அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது ஆஜரான உத்தர பிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர், லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். எட்டு உயிர்கள் பலியாகி இருப்பது துரதிஷ்டவசமானது தான் என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் தொடர்பான நிலவர அறிக்கையை நாளையே தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெயர்கள், கைது விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு தரப்புக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்