உத்தரப் பிரதேசம் : 27 ஆமைகளை கடத்தி சென்ற இருவர் கைது
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் 27 ஆமைகளை எடுத்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் 27 ஆமைகளை எடுத்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிலாஸ்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சாக்குக்குள் ஆமைகளை கடத்திச் சென்றது தெரிய வந்தது. காவல்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆமைகளை மீட்ட போலீசார், அவற்றை நீர்த்தேக்கத்தில் விடுவித்தனர்.
Next Story