ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் சரண் - அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அசாமில் கர்பி ஆங்லாங் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் சரண் - அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம்
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அசாமில் கர்பி ஆங்லாங் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அசாமின் கர்பி ஆங்லாங் பகுதியில் தன்னாட்சி கோரி பல்வேறு அமைப்புகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தன. இந்நிலையில், அந்த அமைப்புகள் தங்களது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு மத்திய அரசு மற்றும் அசாம் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதன்படி, அந்த அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கர்பி ஆங்லாங் பகுதியின் வளர்ச்சிக்கு  கர்பி நல கவுன்சில் அமைக்கப்படும் என்றும், செழிப்பான மாநிலமாக அசாம் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்