ஆசிரியர் தினம் - குடியரசுத் தலைவர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை ஓட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் - குடியரசுத் தலைவர் வாழ்த்து
x
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை ஓட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அறிவாற்றல், ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்க ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதாக, தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுவதாகவும், இணையவழி கல்வி மூலம் ஏற்பட்ட சவால்களை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கி தங்களது பங்களிப்பை வழங்கி வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.   



Next Story

மேலும் செய்திகள்