ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா - உடனடியாக பள்ளியை மூடிய நிர்வாகம்

ஆந்திராவில் பழங்குடியினர் குருகுலப் பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் உடனடியாக பள்ளி மூடப்பட்டது.
ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா - உடனடியாக பள்ளியை மூடிய நிர்வாகம்
x
ஆந்திராவில் பழங்குடியினர் குருகுலப் பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் உடனடியாக பள்ளி மூடப்பட்டது. நெல்லூர் மாவட்டம் சித்தேடு நகரில் உள்ள பழங்குடியினர் குருகுல பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக, பள்ளி மாணவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மாணவருக்கு சோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யட்டதில், 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்