தடுப்பூசி போட்டால் பாகுபலி - பேசுபொருளான பிரதமர் மோடியின் பேச்சு

தடுப்பூசி போட்டவர்கள் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி பயன்பாடு குறித்து பிரதமர் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்..
தடுப்பூசி போட்டால் பாகுபலி - பேசுபொருளான பிரதமர் மோடியின் பேச்சு
x
தடுப்பூசி போட்டவர்கள் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி பயன்பாடு குறித்து பிரதமர் கூறிய கருத்துகளை தற்போது பார்க்கலாம்..


பாகுபலியாக பிரபாஷ் நடித்திருந்த காட்சிகளும், அந்த திரைப்படமும் மிகவும் பிரபலமானவை.

தற்போது தடுப்பூசி போடுவதை பாகுபலியுடன் ஒப்பிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.. நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் பேசிய சில வார்த்தைகள் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது

ஒவ்வொருவர் கைகளில் தடுப்பூசி போடும் போது, அவர்கள் கொரோனாவிற்கு எதிரான போரில் பாகுபலி போன்று வலுவடைந்துள்ளதாக பேசினார் பிரதமர் மோடி 

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் 40 கோடிக்கும் அதிகமானோர் பாகுபலியாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார் 

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடும் காட்சிகள், பாகுபலி மியூசிக்

தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துவதோடு, பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்..

தடுப்பூசி போடுவதை பாகுபலியுடன் இணைந்து பிரதமர் கூறியதை வைத்து, இணையத்தில் ஏராளமானோர் மீம்ஸ்களை பதிவிட்டு வருவதால் மீண்டும் பேசுபொருளானது பாகுபலி...

பாகுபலி படத்தில் அனைவரும் இணைந்து சிலையை நிலைநிறுத்துவது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதே போன்று தகுதியான அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறலாம் என்பதே சுகாதாரத்துறையின் வேண்டுகோள்...


Next Story

மேலும் செய்திகள்