சபரிமலை பக்தர்கள் வருகை குறைவு - 1,849 பேர் மட்டுமே தரிசனம்

சபரிமலையில் குறைவான பக்தர்கள் மட்டுமே தரிசனம் மேற்கொண்டதால் தேவசம் போர்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் வருகை குறைவு - 1,849 பேர் மட்டுமே தரிசனம்
x
சபரிமலையில் குறைவான பக்தர்கள் மட்டுமே தரிசனம் மேற்கொண்டதால் தேவசம் போர்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 

சபரிமலையில் ஆடிமாத பூஜைக்காக வரும் புதன் கிழமை வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு முதலில் ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கேரள அரசிடம் முறையிட்டு, நாளொன்றுக்கு பத்தாயிரம் பக்தர்களுக்கு தேவசம் போர்டு அனுமதி பெற்றிருந்தது. ஆனால் முதல் நாள் தரிசனத்திற்கு மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்த நிலையில், வெறும் ஆயிரத்து 849 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்