"ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி"

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு நேரடி கொள்முதல் அடிப்படையில் தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 56 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன.இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 13-ம் தேதி 2 லட்சத்து 8 ஆயிரத்து123 பேரும்,14-ம் தேதி 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கடந்த 15-ம் தேதி ஒரே நாளில் 68 ஆயிரத்து 46 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இந்நிலையில் நேற்று(ஜூன்-16) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்