நட்ட நடு சாலையில் தீ பற்றி எரிந்த கார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீ பிடித்து எரிந்தது.
நட்ட நடு சாலையில் தீ பற்றி எரிந்த கார்
x
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீ பிடித்து எரிந்தது. அங்குள்ள பொக்ரான் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்து புகை வந்ததால், உடனடியாக காரை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே இறங்கினார். அப்போது, அந்த காரில் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நட்ட நடு சாலையில் கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்