"எதிர்க்கட்சியினர் தூக்கத்தை தொலைத்து விட்டனர் - "பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரமாரி புகார்

மக்கள் அளித்து வரும் ஆதரவால் எதிர்க்கட்சியினர் தூக்கத்தை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தொலைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் தூக்கத்தை தொலைத்து விட்டனர் - பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரமாரி புகார்
x
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் முடிவடைய உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 4 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதலில், இன்று காலை சாப்ரா என்னும் இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு, நிதிஷ் குமாரின் வெற்றி உறுதியாகி விட்டதாக கூறினார். மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேஜஸ்வி யாதவ், தங்கள் குடும்பத்திற்காகவே வாழ்ந்தது, அதற்காகவே சண்டை போடுவதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகள் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ இளைய தலைமுறைக்கோ ஒன்றுமே செய்யவில்லை என்றும் பிரதமர் மோடி புகார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்