ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. குற்றாவாளிகளின் வீடுகளில் சோதனையை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், அவர்களின் உறவினர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். குற்றவாளிகளில் ஒருவனான லவ குசா வீட்டில், கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த சட்டையை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே சட்டையில் இருப்பது ரத்தம் கிடையாது. லவ குசா ஒரு பெயிண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார் என அவனுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story