நவி மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை - பைப்பிற்குள் மறைக்கப்பட்டிருந்த 191 கிலோ போதை பொருட்கள்

மும்பையில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நவி மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை - பைப்பிற்குள் மறைக்கப்பட்டிருந்த 191 கிலோ போதை பொருட்கள்
x
ஆப்கானிஸ்தானில் இருந்து மும்பைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன், வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். 
அப்போது, துறைமுகத்தில் இருந்த பைப்புகளில், போதைபொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 191 கிலோ எடைகொண்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்