ரூ.50 கோடி கடன் பாக்கி - டீ கடைக்காரருக்கு அதிர்ச்சி அளித்த வங்கி

அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.
ரூ.50 கோடி கடன் பாக்கி - டீ கடைக்காரருக்கு அதிர்ச்சி அளித்த வங்கி
x
அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் டீக்கடையை திறக்க வேண்டி,  50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு மனு செய்திருந்தார். அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், ஏற்கனவே வங்கியில் 50 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளீர்கள் என்றும், இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும் என்றும் கேட்ட அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், டீக்கடை வைத்துள்ள தான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது என ராஜ்குமார் புலம்பி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்