சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை

கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை
x
கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி  நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக  பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, சீன துருப்புகளை, நமது வலிமை மிகுந்த ராணுவம் எல்லையை விட்டு விரட்டி அடித்து உள்ளதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்றும், எந்த இந்திய நிலைகளையும் யாரும் கைப்பற்றவில்லை என கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாட்டு மக்களிடம் தவறான தகவலை தெரிவித்ததற்கு மன்னிப்புக் கோர பிரதமரை, காங்கிரஸ் கட்சி  வலியுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்