கேரளாவில் மீண்டும் ஒரு யானை பலி - வாயில் காயங்கள் காணப்பட்டதால் வெடிபொருள் காரணமா ? வனத்துறையினர் ஆய்வு

கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் 5 வயது யானையை வனத்துறையினர் மீட்டனர்.
கேரளாவில் மீண்டும் ஒரு யானை பலி - வாயில் காயங்கள் காணப்பட்டதால் வெடிபொருள் காரணமா ? வனத்துறையினர் ஆய்வு
x
கேரள மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி வனப்பகுதியில், உயிருக்கு போராடிய நிலையில் 5 வயது யானையை வனத்துறையினர் மீட்டனர். அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிசை பலனின்றி உயிரிழந்தது.  அதைத் தொடர்ந்து வனத்துறை உடற்கூராய்வு மேற்கொண்டதில், யானையின் வாயில் காயங்கள் காணப்பட்டுள்ளன. வெடிபொருள் வெடித்து உயிரிழந்ததா என்பது பற்றி , பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்