கேரளாவில் மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3451 ஆக உயர்வு
கேரளாவில் செவ்வாய்க்கிழமையன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
கேரளாவில் செவ்வாய்க்கிழமையன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை ஆயிரத்து 807 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 620 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து196 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும்,இவர்களில் 2 ஆயிரத்து 206 பேர் மருத்துவமனைகளில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story