புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் பணியாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story