ஸ்ரீ காளஹஸ்தியில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்
மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கட் கிழமையன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கட் கிழமையன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க, கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. யாகம் வளர்த்து பக்தர்கள் கொடுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை வைத்து கொடியேற்றப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய இந்த கொடியேற்ற விழா, மாலை வரை நடைபெற்றது. முன்னதாக வெள்ளி அம்பாரிகளில் சுவாமி அம்மையார், நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Next Story