நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. மேலும் இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மனுவை நாளை விசாரிக்க உள்ளது.
Next Story