2 லட்சம் துப்பாக்கி உரிமம் வழங்கியதில் முறைகேடு : முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீடுகளில் சிபிஐ சோதனை
ஜம்மு காஷ்மீரில் 2 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரில் 2 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து, விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரை சாராதவர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீ நகர், ஜம்மு, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களின் 13 பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் குடியிருப்புகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story