குஜராத் : கடத்தல் குழந்தைகள் 138 பேர் அதிரடியாக மீட்பு
குஜராத் மாநிலம் சூரத்தில், கடத்தல் குழந்தைகள் 138 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை கடத்தல் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வும், தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், குழந்தைகள் கடத்தல் தொடர்வது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில், குழந்தைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், ஏதும் அறியதாக பிஞ்சுக் குழந்தைகள் 138 பேரை அதிரடியாக மீட்டனர். ஏதும் அறியாத சிறுவர், சிறுமியரிடம் அவர்களின் முகவரிகள் கேட்கப்பட்டு, விரைவில் பெற்றோர் உள்ளிட்ட உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இந்தக் குழந்தைகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தல் கும்பல் குறித்த தகவல் ஏதும் இல்லை.
Next Story