சபரிமலையில் 27ஆம் தேதி மண்டல பூஜை - பார்த்தசாரதி கோவிலில் நாளை தங்க அங்கி புறப்பாடு

சபரிமலையில் வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதை ஒட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நாளை தங்க அங்கி புறப்பாடு நடைபெறுகிறது.
சபரிமலையில் 27ஆம் தேதி மண்டல பூஜை - பார்த்தசாரதி கோவிலில் நாளை தங்க அங்கி புறப்பாடு
x
சபரிமலையில் வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதை ஒட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நாளை தங்க அங்கி புறப்பாடு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை, இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையின் நிறைவு வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜையின் போது, திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய 450 எடை கொண்ட தங்க அங்கி, மூலவருக்கு அணிவிக்கப்படும். பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அந்த அங்கி, பூஜைக்கு 4 நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. இந்த பவனி நாளை தொடங்குகிறது. 



Next Story

மேலும் செய்திகள்