திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமி கொலை:காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் சிறுமியின் சடலம்

ஆந்திர மாநிலத்தில் பெற்றோருடன் திருமணத்திற்கு சென்ற ஆறு வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமி கொலை:காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் சிறுமியின் சடலம்
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தம்புள்ள பள்ளியை சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி, தன் மனைவி மற்றும் ஆறு வயது மகளுடன் குரபலகோட்டா அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து இன்று காலை திருமணம் நடைபெறவிருந்த‌ நிலையில், சித்தா ரெட்டி தன் குடும்பத்துடன் மண்டபத்திலே தங்கினார். இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென சிறுமி மாயமானதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாருடன் இணைந்து அங்கிருந்த பலரும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருமணமண்டபம் அருகே காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் இருந்த ரத்தக்காயங்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதை வெளிக்காட்டின. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்து சென்றது பதிவாகியிருந்த‌து. இதை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்