கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. வணிக ரீதியிலான பட்டாவை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை. இதனை ஒட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு - தனியார் பேருந்துகள், ஆட்டோ, ஜீப், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்