கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை : நேரடி விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை
கல்கி ஆசிரமத்தில் சிக்கிய ஆவணங்களை வருமான வரி துறையிடம் இருந்து பெற்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது, அமலாக்கத்துறை
கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதில் துபாய், பிரிட்டிஷ் உள்ளிட்டவெளி நாடுகளில் சுமார் நூறு கோடிக்கும் மேலாக கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் சிபிஐ முதல் அறிக்கை தாக்கல் செய்யும் முன்னரே, அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்று உள்ளதால் வழக்கை நேரடியாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது.
Next Story