செம்மரம் வெட்டிய 25 பேர் கும்பல் - தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடும் போலீஸ்

ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த கொடூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி எடுத்துவந்த கடத்தல் கும்பலை, திடீரென போலீசார் தடுத்ததாகவும், அப்போது, செம்மரங்களை வீசிவிட்டு 15 பேர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
செம்மரம் வெட்டிய 25 பேர் கும்பல் - தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடும் போலீஸ்
x
ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த கொடூர் வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது, 25 பேர் செம்மரம் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை பிடிக்கும் நோக்கில், விடியும்வரை போலீசார் காத்திருந்துள்ளனர். இதை அறியாமல் செம்மரங்களை வெட்டி எடுத்துவந்த கடத்தல் கும்பலை, திடீரென போலீசார் தடுத்ததாகவும், அப்போது, செம்மரங்களை வீசிவிட்டு 15 பேர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. கடத்தல்காரர்களை துரத்தியதில், 10 பேர் மட்டுமே சிக்கியதாகவும், அவர்கள் வைத்திருந்த 19 செம்மரங்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய செம்மரம் வெட்டியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்