ஹிமாச்சல் பிரதேசம் : கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - 7 உடல்கள் மீட்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் பிரதேசம் : கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - 7 உடல்கள் மீட்பு
x
ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சோலான் மாவட்டத்தில் உள்ள குமர்ஹட்டி பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள  அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. அங்கு வசித்த பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 6 பேர் ராணுவ வீரர்கள் என தெரிய வந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்