"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர்,  சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டில் நிலவிவரும் வறட்சி, விவசாயத்தில் உற்பத்தியை பெருக்குவது, விவசாயிகளின் விளைபொருளுக்கு ஏற்ற விலை கொடுப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார். ஏனைய மாநிலங்களை போல புதுவைக்கும் 42 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களில் புதுவை மாநிலத்தால் வாங்கப்பட்ட கடனை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்