ஜார்க்கண்டில் சிறிய ரக குண்டுவெடிப்பு : பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேர் படுகாயம்

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கெல்லாவை அடுத்த குச்சாய் என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில், பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜார்க்கண்டில் சிறிய ரக குண்டுவெடிப்பு : பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேர் படுகாயம்
x
ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கெல்லாவை அடுத்த குச்சாய் என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த குண்டு வெடிப்பில், பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மாவோயிஸ்ட்டுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்த வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், மூன்று வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, குச்சாய் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்