தகுந்த நேரத்தில் பதிலடி - பாக்.பிரதமர் இம்ரான் கான் உறுதி

தேசிய பாதுகாப்பு குழு உடன் பாக்.பிரதமர் அவசர ஆலோசனை
தகுந்த நேரத்தில் பதிலடி - பாக்.பிரதமர் இம்ரான் கான் உறுதி
x
இந்தியாவின் துல்லிய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேசிய பாதுகாப்பு குழு உடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியான நேரத்தில் தகுந்த இடத்தில் இந்தியாவிற்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இது குறித்து உலக நாடுகளிடம் இந்தியா பற்றி புகார் கூறும் என்றும், இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டவும் இம்ரான் கான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்