"ஜனநாயகத்தை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள்" - கேரள மாநில ஆளுநர் சதாசிவம்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், தேசிய அளவிலான மாணவர் நாடாளுமன்றம் நடைபெற்றது.
ஜனநாயகத்தை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் - கேரள மாநில ஆளுநர் சதாசிவம்
x
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், தேசிய அளவிலான மாணவர் நாடாளுமன்றம் நடைபெற்றது. கேரள சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற, இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில ஆளுநர் சதாசிவம், அரசியல் என்பது அரசியல் கட்சிகளை சார்ந்தது மட்டுமல்ல என்றார். ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக, வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவதை சுட்டிக்காட்டி விளக்கினார். தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், ஆளுநர்  ஒரே விமானத்தில் சென்னைக்கு வந்ததையும், விமான நிலையத்திலிருந்து ஒரே காரில் சென்றதையும்  மேற்கோள்காட்டி பேசிய ஆளுநர் சதாசிவம், சிறந்த ஜனநாயகத்தை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்