ஆதித்யாநாத் ஹெலிக்காப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு : கடைசி நேரத்தில் அனுமதி கோரியதாக மம்தா அரசு அதிரடி

மேற்குவங்கத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆதித்யாநாத் ஹெலிக்காப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு : கடைசி நேரத்தில் அனுமதி கோரியதாக மம்தா அரசு அதிரடி
x
மேற்குவங்கத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அங்கு, பிரதமர் மோடியுடன் பொதுக் கூட்டங்களில், பங்கேற்பதற்காக யோகி ஆதித்யநாத் செல்ல இருந்தார். இதற்காக யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தெற்கு தினாஜ்பூர் மற்றும் பாலூர்காட் ஆகிய பகுதிகளில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக கூறி, மம்தா பானர்ஜி அரசு மறுத்தது. இதனால், யோகி ஆதித்யநாத்தால், மோடியின் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்தச் சம்பவம் பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்