விவசாயிகள் போராட்டம் : நொய்டா சாலை மூடப்பட்டது
புதுடெல்லியில் இருந்து நொய்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலை, விவசாயிகள் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.
புதுடெல்லியில் இருந்து நொய்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலை, விவசாயிகள் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் பேரணியாக அணி திரண்டு வருவதால் அந்த சாலையில் பல மணி நேரமாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்த டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளதுடன், இது தொடர்பான நிலவரங்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Next Story