கேரளாவில் தொடரும் வன்முறை பாஜக, மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வீடுகள் மீது தாக்குதல்

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த விவகாரம் தொடர்பாக கேரளாவில் வன்முறை நீடித்து வருகிறது.
கேரளாவில் தொடரும் வன்முறை பாஜக, மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வீடுகள் மீது தாக்குதல்
x
கேரளாவில் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சுமார் ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக வன்முறை நீடித்தது. பத்தம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வீடுகள் கல்வீசி தாக்கப்பட்டன.   கண்ணூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஷம்சீர், மார்க்சிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் சசி, பாஜக ராஜ்யசபா எம்பி முரளீதரன், ஆர்எஸ்எஸ் விபாக் சங்க் சாலக் சந்திரசேகர் ஆகியோரின் வீடுகளில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்