புத்தாண்டை கொண்டாட சென்ற மாணவர்களின் கார் விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திர மாநில தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
புத்தாண்டை கொண்டாட சென்ற மாணவர்களின் கார் விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
x
ஆந்திர மாநில தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்கள், ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக விஜயவாடாவிற்கு காரில் சென்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்