போலீஸ் - பொதுமக்கள் மோதல், இருவர் பலி

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் பகுதியில், சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டு வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
போலீஸ் - பொதுமக்கள் மோதல், இருவர் பலி
x
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் பகுதியில், சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டு வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் ஒரு காவல் ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மோதல் காரணமாக புலந்த்ஷர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்