சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு - கேரள போலீஸ் அறிவிப்பு

சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு என கேரள போலீஸ் அறிவிப்பு..
சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு - கேரள போலீஸ் அறிவிப்பு
x
* சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு என கேரள போலீஸ் அறிவிப்பு. தகுந்த பாதுகாப்புடன் கவிதாவையும் ரஹனாவையும் திருப்பி அனுப்புவோம் என கேரள ஐ.ஜி. ஸ்ரீஜித் அறிவிப்பு. சன்னிதானத்தில் இருக்கும் பக்தர்கள் உற்சாக கோஷம்.

* இதையடுத்து தெலங்கானாவை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் கேரளாவை சேர்ந்த மாடலிங் பெண் ரஹேனா பாத்திமா ஆகியோர் இன்று சபரிமலை சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் இருவரும்  சன்னிதானத்தை நெருங்கிச்சென்றனர். அங்கே ஐயப்ப பக்தர்கள் அவர்களை முற்றுகையிட்டு கடுமையாக போராடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பின், பக்தர்களுடனும்,  அப்பெண்களுடனும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவ்விரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு  கேட்டுக்கொண்டதை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பத்திரமாக திருப்பி அனுப்பினர்..இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..


Next Story

மேலும் செய்திகள்