தமிழகம் குறித்து சர்ச்சை பேச்சு - சித்துவுக்கு, பாஜக கண்டனம்

"பாகிஸ்தான் மீது பாசம் காட்டு சித்து"
தமிழகம் குறித்து சர்ச்சை பேச்சு - சித்துவுக்கு, பாஜக கண்டனம்
x
தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு,  பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ள சித்து,இமாசலபிரதேச மாநிலம் கசாலி நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பேசுகையில், தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது,அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்கு பிடிக்காது என்று கூறியிருந்தார். ஆனால் பஞ்சாபில் இருக்கும் கலாசாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது என்றும், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாபி மொழியில் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சித்துவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா,  நாட்டை பிரிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி இது என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் மீது பாசத்தை வெளிப்படுத்தும் சித்து, இம்ரான்கான் அமைச்சரவையில் சேர்ந்து விடலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்