புதுச்சேரி : மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் நாராயணசாமி ஆய்வு
புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அண்ணாநகர், திருமால் நகர், டி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மின் மோட்டார் அமைக்க உத்தரவிட்டார். மேலும், மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story