ஏழுமலையான் கோயில் 2வது நாள் பிரம்மோற்சவம் : சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதியில் 2வது நாள் பிரம்மோற்சவ விழாவில், அன்ன வாகனத்தில் மலையப்ப சாமி வீதியுலா வந்தார்
ஏழுமலையான் கோயில் 2வது நாள் பிரம்மோற்சவம் : சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாவது நாள் இரவில், சரஸ்வதி அலங்காரத்துடன் அன்ன வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பக்தர்களின், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து  அருள் பாலித்தார். அப்போது, பக்தர்களின் பஜனைகள், கோலாட்டம் நடைபெற்றது.  பல்வேறு வேடங்களில் பக்தர்கள் வந்தனர். பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான சனிக்கிழமை காலையில், சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்