மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது புகார்

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் மீது புகார்
x
கோதாவரி மாவட்டம் ஏலூர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராம்பாபுவிடம், 13 வயது சிறுமி ஒருவர் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். 

ஆசை வார்த்தைகள் பேசி அந்த சிறுமியை ராம்பாபு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதால், ராம்பாபு மாத்திரை கொடுத்துள்ளார். 

இதனை சாப்பிட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், ஆசிரியர் ராம்பாபுவை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். 

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை, ஆசிரியரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்