தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன் - அரசு மருத்துவமனை அமரர் வாகனம் தர மறுப்பு
தாயின் சடலத்தை உறவினர் ஒருவரின் துணையுடன் இருசக்கர வாகனத்தில் மகன் ஏற்றிச்சென்றார்.
மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தின் மாஸ்தாபூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை பாம்பு கடித்தது. இந்நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற அவர் உயிரிழந்ததை அடுத்து,அவரது சடலத்தை எடுத்துச் செல்ல, அரசு மருத்துவமனை ஊழியர்கள் அமரர் வாகனம் தர மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல், தாயின் சடலத்தை உறவினர் ஒருவரின் துணையுடன் இருசக்கர வாகனத்தில் மகன் ஏற்றிச்சென்றார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Next Story