நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமக்கு ஜாமின் வழங்க கோரி ஹேமநாத் தொடர்ந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ராவின் நகங்களை பகுப்பாய்வு செய்ததில் ஹேம்நாத்துக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கபெறவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஹேம்நாத்துக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார்.
Next Story