ஆக்‌ஷன் பட இழப்பு விவகாரம் -ரூ.8.29 கோடியை தராத விஷால் : அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அக்.9ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

ஆக்‌ஷன் பட இழப்பை ஈடுகட்டும், 8 கோடியே 29 லட்ச ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்‌ஷன் பட இழப்பு விவகாரம் -ரூ.8.29 கோடியை தராத விஷால் : அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அக்.9ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
x
விஷால் நடிப்பில், ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தை வெளியிட தடை கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆக்‌ஷன் படம் இழப்பை சந்தித்தால், 8 கோடி 29 லட்சம் ரூபாய் தருவதாக தங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த விஷால், படம், இழப்பைச் சந்தித்த நிலையில், பணம் தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தற்போது விஷால் நடிப்பில் சக்ரா என்ற படம் திரைக்கு வரவுள்ளது. அதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனுவில், ஒப்பந்தம் செய்தபடி பணத்தை தராத விஷால் மீதும், தங்களிடம் கூறி ஒப்பந்தம் செய்த கதையை, வேறு நிறுவனம் மூலம் படமாக்கிய இயக்குநர் ஆனந்தன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா, விஷால், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்