நடிகை ராகினி மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - அடுத்தடுத்து அதிரடிகளால் கர்நாடகாவில் அதிர்ச்சி

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராகினி திவேதி வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகை ராகினி மீது தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - அடுத்தடுத்து அதிரடிகளால் கர்நாடகாவில் அதிர்ச்சி
x
பெங்களூருவில் போதைப்பொருள் கும்பலிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்jதற்காக கன்னட முன்னணி நடிகை ராகினி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ராகினி 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கன்னட திரையுலகத்தினரை குறிவைத்து போதைப் பொருட்களை விநியோகித்த கடத்தல் மன்னன் லோம் பெப்பர் சாம்பா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த இவர், விஐபிகளை குறிவைத்து போதைப் பொருளை விநியோகம் செய்தது உறுதியான நிலையில் அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடக்கும்  அதிரடி சம்பவங்களால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்