"ஆகஸ்ட் 7ல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆஜராக வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கில் ஞானவேல் ராஜா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆஜராக வேண்டும் -  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வழக்கில் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராக விலக்களிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா தெரிவித்தார். இதையடுத்து வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஞானவேல்ராஜா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்