இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ்
x
தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர், ஏ.ஆர் .ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி  ரஹ்மான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி,  ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் அவர் உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்