டப்பிங் சங்கத்திற்கு மீண்டும் தலைவரானார் ராதாரவி : பாடகி சின்மயி வேட்புமனு நிராகரிப்பு

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தின் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டப்பிங் சங்கத்திற்கு மீண்டும் தலைவரானார் ராதாரவி : பாடகி சின்மயி வேட்புமனு நிராகரிப்பு
x
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்து வந்தார். சங்க நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவதால் வரும் 15ந்தேதி இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருந்த‌து. இதையடுத்து,  தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக, பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு களம் இறங்கினார். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.  அப்போது சங்க சட்ட விதிகளுக்கு உட்படவில்லை என்பதால் சின்மயி போட்டியிட தகுதியில்லை எனக்கூறி  அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால்   ராதாரவி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்